ஒரு நாளில் வாழ்க்கை இங்கே எங்கும் ஓடிப்போகாது


எனை மிகவும் கவர்ந்த சமீபத்திய திரை பாடல் ஒன்று. புதுப்பேட்டை படத்தில் யுவன் சங்கர் ராஜா வின் இசையில் நா.முத்துகுமார் - இன் வரிகள்.
எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் தயங்காமல் இந்த வரிகளுக்கு தேசிய விருது வழங்கி விடுவேன்!! :)

----------------------------------------------------------
ஒரு நாளில் வாழ்க்கை இங்கே எங்கும் ஓடி போகாது
மறு நாளும் வந்து விட்டால் துன்பம் தேயும் தொடராது
எத்தனை கோடி கண்ணீர் மண் மீது விழுந்திருக்கும்
அத்தனை கண்ட பின்னும் பூமி இங்கு பூ பூக்கும்
ஓஓஓஓஓஓ, கரு வாசல் விட்டு வந்த நாள் தொட்டு
ஓஓஓஓஓஓ, ஒரு வாசல் தேடியே விளையாட்டு
ஓஓஓஓஓஓ, கண் திறந்து பார்த்தால் பல கூத்து
ஓஓஓஓஓஓ, கண் மூடிக்கொண்டால்ஓஓஓஓஓஓ …

போர்களத்தில் பிறந்துவிட்டோம், வந்தவை போனவை வருத்தமில்லை
காட்டினிலே வாழ்கின்றோம், முட்களின் வலி ஒன்றும் மரணமில்லை
இருட்டினிலே நீ நடக்கயிலே, உன் நிழலும் உன்னை விட்டு விலகிவிடும்
நீ மட்டும் தான் இந்த உலகத்திலே, உனக்கு துணை என்று விளங்கிவிடும்
தீயோடு போகும் வரையில், தீராது இந்த தனிமை
கரை வரும் நேரம் பார்த்து,கப்பலில் காத்திருப்போம்
எரிமலை வந்தால் கூட ஏறி நின்று போர் தொடுப்போம்
ஓஓஓஓஓஓ, அந்த தெய்வ ரகசியம் புரிகிறதே
ஓஓஓஓஓஓ, இங்கு எதுவும் நிலையில்லை கரைகிறதே
ஓஓஓஓஓஓ, மனம் வெட்ட வெளியிலே அலைகிறதே
ஓஓஓஓஓஓ, அந்த கடவுளை கண்டால்ஓஓஓஓஓஓ …

அது எனக்கு இது உனக்கு, இதயங்கள் போடும் தனிக்கணக்கு
அவள் எனக்கு இவள் உனக்கு, உடல்களும் போடும் புதிர்க்கணக்கு
உனக்குமில்லை இது எனக்குமில்லை, படைத்தவனே இங்கு எடுத்துக்கொள்வான்
நல்லவன் யார், அட கெட்டவன் யார், கடைசியில் அவனே முடிவு செய்வான்
பழி போடும் உலகம் இங்கே,பலியான உயிர்கள் எங்கே
உலகத்தின் ஓரம் நின்று அத்தனையும் பார்த்திருப்போம்
நடப்பவை நாடகம் என்று நாமும் சேர்ந்து நடித்திருப்போம்
ஓஓஓஓஓஓ, பல முகங்கள் வேண்டும் சரி மாட்டிக்கொள்வோம்,
ஓஓஓஓஓஓ, பல திருப்பம் தெரியும் அதில் திரும்பிக்கொள்வோம்,
ஓஓஓஓஓஓ, கதை முடியும் போக்கில் அதை முடித்துக்கொள்வோம்,
ஓஓஓஓஓஓ, மறு பிறவி வேண்டுமாஓஓஓஓஓஓ …


பாடலை ஓட விட்டு வரிகளை எழுதிக்கொள்ளலாம் என்று நினைத்தேன் ஆனால் Google-இன் கருணையால் கீழ்கண்ட இணைப்பில் இந்த பாடல் கிடைத்தது.
http://pranni.wordpress.com/2006/07/11/puthupettai/
ஒரு முறை பாடலை ஓட விட்டு சரி பார்த்ததோடு சரி!! :)

எளிமையான இசை,மெல்லிய கிதார் பின்னனி,இடையில் அற்புதமான வயலின் மெருகேற்றல், யுவன் சங்கரின் தெளிவான உச்சரிப்பு,அனைத்தும் இந்த பாடலின் வரிகளுக்கு அழகு சேர்ப்பவை.
நேரம் கிடைக்கும்போது கேட்டுதான் பாருங்களேன்!! :)


OruNaaliltamilmaal...

8 comments:

Jana said...

Arumayana varigal matrum Isai! Ingae antha padalai padithavudan meendum kaetka vaendum yenru thonriyathu!
-Jana

CVR said...

ஆமாம் ஜனா!!
இது உண்மையிலேயே ஒரு அறுமையான பாடல்தான்!!
கேட்டு மகிழவும்!! :)

Karthikeyan Rajasekaran said...

போர்களத்தில் பிறந்துவிட்டோம், வந்தவை போனவை வருத்தமில்லை

குறிப்பாக...இந்த வரி எனை மிகவும் கவர்ந்த வரி...

CVR said...

நம் மென்பொருள் துறைக்கு மிகவும் எற்ற வார்த்தைகள்!!
இல்லையா கார்த்தி??? :)

sriram said...

hmm arumaiyana padal
nalla varigal......and also yuvan romba arumaiya padi irukkar

CVR said...

மிகவும் சரி ஸ்ரீராம்!!
பதிவுக்கு வருகை தந்தமைக்கு நன்றி! :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//இந்த வரிகளுக்கு தேசிய விருது வழங்கி விடுவேன்!! :)//

விருது கூட வரிகளுக்குத் தான் பார்த்தீங்களா?
நா.முத்துக்குமார் சார் - உங்களுக்கு இல்லை! :-)
உனக்குமில்லை இது
எனக்குமில்லை,
படைத்தவனே இங்கு எடுத்துக்கொள்வான் :-))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//நீ மட்டும் தான் இந்த உலகத்திலே, உனக்கு துணை என்று விளங்கிவிடும்//

இன்னொரு துணை ஒன்று உண்டே! அது யாருன்னு கண்டு புடிங்க கரீட்டா? :-)

//இருட்டினிலே நீ நடக்கயிலே, உன் நிழலும் விட்டு விலகிவிடும்//

உன் இருட்டும் வேறு ஒருவனுக்கு
நிழலாக ஆகி விடும்! ;-)

I can guess why CVR loves this sooooooo much! :-)

Related Posts Widget for Blogs by LinkWithin