ஜூலை நாட்காட்டிகள்

இந்த மாதம் அநியாயத்திற்கு ஆணிகளின் ஆளுமையால் அவ்வளவாக படங்கள் எடுக்க முடியவில்லை.சுற்றுலாக்கள் வெளியே போவது என்று எதுவுமே முற்றிலுமே இல்லாமல் போனதால் வீட்டு வாசலில் தெருவோர பூக்கள் சிலவற்றை படம் எடுத்ததோடு சரி! :-(

அதுவே இந்த மாத நாட்காட்டிகளாக.....
இந்த மாதமாவது ஆணிகளின் தொல்லை ஒழிந்து நாலு எடத்துக்கு போய் படம் எடுக்க வாழ்த்துங்க மக்களே... :)






தசாவதாரம் - சில எண்ணங்கள்

வெகு நாட்களாக பார்க்க வேண்டும் என்று நினைத்து ,நேற்றுதான் தசாவதாரம் படம் பார்க்க முடிந்தது.
படத்தை பார்த்த பின் எனக்கு தோன்றிய சில எண்ணங்கள் எழுத்துக்களாய்.

இந்த படம் வந்ததில் இருந்து ஒலகத்தரம் என்ற வார்த்தை பெரிதும் அடிபட்டது.
இது ஒலகத்தரம் வாய்ந்த படம் என்று சொல்ல முடியாது. ஆரம்ப காட்சிகளில் கேமரா கோணங்கள் நன்று ,ஆனால் தேவைக்கு சற்றே அதிகப்படியான சுற்றல் என்று தோன்றியது. கிராபிக்ஸ் மிகவும் ஏமாற்றமளித்தது.
இந்த கிராபிக்ஸ் முயற்சியை என்னால் ஒலகத்தரம் என்று விஷயம் தெரிந்த யாரிடமும் கண்டிப்பாக பீற்றிக்கொள்ள முடியாது...
12-ஆம் நூற்றாண்டு கிராபிக்ஸ் காட்சிகளும் ,கடைசியில் சுனாமி கிராபிக்ஸ் காட்சிகளும் , மிகவும் தரம் குறைந்தவையாக இருந்தன.ஆனால் ஒன்றாக தோன்றும் காட்சிகளில் கிராபிக்ஸ் கலக்கல்.பல இடங்களில் பிசிறு இல்லாமல் பார்க்க முடிந்தது(ஆனால் சில இடங்களில் அதுவும் சொதப்பல் தான்). சில இடங்களில் 5-6 கமல்கள் வருவது போன்ற காட்சியமைப்புகள் உள்ள இடங்களில் இதில் அனைவரும் வேறு வேறு கதாபாத்திரங்களே என்ற எண்ணம் தான் மேலோங்கி இருந்தது.அதற்கு கமலஹாசனின் மேன்மையான நடிப்பும் தொழில்நுட்ப கலைஞர்களின் உழைப்பும் தான் காரணம்.

அதுவும் கடைசியில் இரண்டு கமல்கள் சண்டை போடும் காட்சியெல்லாம் எப்படி செய்தார்கள் என்று நினைத்தே பார்க்க முடியவில்லை.அதுவும் ஒரு இடத்தில் இருவரும் சண்டை போடும் போது தண்ணிரில் காலை சுழற்றி அடிக்க,தண்ணீர் தெறிக்கும்!! அதெல்லாம் கிராபிக்ஸ் என்று சொல்ல முடியாத அளவுக்கு தத்ரூபமாகவே தான் இருந்தது(நான் கவனித்த வரை,படத்தை ஒரே முறை தான் பார்த்திருக்கிறேன் என்பதை கருத்தில் கொள்க).
இந்த கிராபிக்ஸ் முயற்சி கண்டிப்பாக உலகத்தரம் வாய்ந்தது தான்(சில இடங்களைத்தவிர)
சும்மா இரண்டு படங்கள் எடுத்து அதை ஒன்றாக இணைப்பது எவ்வளவு சிரமம் என்று தெரிந்தால் இதை பாராட்ட முடியும்.முயன்று பார்க்க விரும்புபவர்கள் இங்கே சொடுக்கவும்...


படத்தில் 10 கமல்கள் கண்டிப்பாக தேவையில்லை தான். சில கதாபாத்திரங்கள் முற்றிலுமாக திணிக்கப்பட்டவை என்றும் மேலும் பல கதாபாத்திரங்கள் கமல் நடிக்க வேண்டிய அவசியமே இல்லை என்பதும் தெள்ளத்தெளிவு.ஆனால் படத்தின் major selling point இந்த பத்து வேடங்கள்தான் என்பதால் இந்த compromises செய்திருக்கிறார்கள் தெரிகிறது. Compromises-கள் இல்லாமல் எடுக்கப்பட்ட "அன்பே சிவம்" என்ன ஆகியது என்று நாம் அனைவரும் அறிவோம். தான் சொல்ல வந்த கருத்தை முடிந்த வரை பரப்ப வேண்டும் என்பதற்காக இதை ஒரு முடிந்த வரை ஒரு கமர்சியல் படமாக எடுக்க கமல் முனைந்திருப்பது புரிகிறது. அதற்காக பத்து வேடங்கள் என்ற selling point-உம் ,அதனால் compromises-களும் தவிர்க்க முடியாததாகிவிட்டது என்று நினைக்கிறேன்.
ஆனாலும் இத்தனை கதாபாத்திரங்களை வைத்துக்கொண்டு திரைக்கதை எங்கேயும் தேங்கிவிடாமலும் பெரிதாக ஒட்டல்கள் இல்லாமல் சீராக கதை செல்லுமாறு பார்த்துக்கொண்ட கமலின் திரைக்கதைக்கு பாராட்டுக்கள்.

கமலின் நடிப்பை பற்றி சொல்ல வேண்டும் என்றால்,பல நேரங்களில் நாம் பார்த்துக்கொண்டிருப்பது கமல் தான் என்பதே எனக்கு தோன்றவில்லை.அந்த அளவுக்கு கதாபாத்திரங்கள் பளிச்சிட வைத்திருக்கிறது அவர் நடிப்பு.பிளெட்சர் heavily inspired by Terminator 2 என்று தோன்றியது.ஆனால் I loved it!
பூவராகன் கதாபாத்திரத்திற்கு தான் கமல் அதிக்கபடியாக உழைத்திருப்பார் என்று எனக்கு தோன்றியது(among the really wanted characters,iam ignoring bush,japanese and stuff here).
ஏனென்றால் மற்ற கதாபாத்திரங்கள் எல்லாவற்றையும் கமல் முன்பு எப்போதோ செய்திருப்பார் என்று நினைக்கிறேன்.அட்லீஸ்ட் இது போல பண்ணிக்கொள்ளலாம் என்று ஒரு ரெபெரென்ஸாவது இருக்கும்.ஆனால் பூவராகன் was something unique.அந்த கதாபாத்திரத்தின் வசன உச்சரிப்பு மற்றும் மேனரிசம் இவற்றை கமல் நன்றாக நடித்திருந்தார்.படத்தில் உருத்தாத மேகப்புகளில் இந்த கதாபாத்திரமும் ஒன்று என்பதும் இங்கு சொல்லியாக வேண்டும்.

படத்தை பார்த்து முடித்த வுடன்,this movie deserved Shankar and A.R.Rahman என்ற எண்ணத்தை தவிர்க்க முடியவில்லை. தனது மனதில் தோன்றிய காட்சிகளை compromise இல்லாமல் திரையில் வடிக்கும் completeness,ஷங்கரிடம் நான் எப்போதும் பார்த்திருக்கிறேன்.ஜெண்டிமேனில் இருந்து அந்நியன் வர அவர் எடுத்திருக்கும் பாடல்காட்சிகளே இதற்கு சான்று. ஷங்கர் இருந்திருந்தால் நான் முன்பு குறிப்பிட்ட கிராபிக்ஸ் சொதப்பல்கள் இருந்திருக்காது என்று தோன்றியது! அதெல்லாம் சரியாக இருந்திருந்தால் இந்தப்படத்தை உலகத்தரம் வாய்ந்த படம் என்று நானும் சொல்லியிருப்பேன்.
அதே போல் படத்தின் பிண்ணனி மற்றும் பாடல்களும் very dissappointing!! Not fitting enough for a movie of this stature and hype!!
இது போன்ற படத்துக்கு ரஹமான் அல்லது இளையராஜா நிச்சயம் தேவை!

படத்தின் கருத்து ,கமலின் ஆத்திக நாத்திக பின்பற்றுதல்கள் பற்றி அறிந்தவர்களுக்கு ஆச்சரியமளிக்காது.

In a democratic country , a person has a right to express his opinion in whatever he chooses to present.
அதனால் அதை பத்தி ஒன்றும் சொல்வதற்கில்லை.

நாம் தூங்கி எழுந்திருக்கும் போது நமக்கு நாம் யார் என்ற உணர்வே இருக்காது. ஒரு சில மணித்துளிகளுக்குப்பின் நமது நிலை,நமது கவலைகள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக நம் நியாபகத்துக்கு வந்து சேரும்.அதை போன்று ஒரு படம் முடிந்த பிறகு ஏற்பட்டால் அந்தப்படம் பாஸ் ஆகிவிட்டது என்பது எனது thumbrule.

நான் படத்தை முடித்து விட்டு வெளியே வரும்போது தான் என் அலுவலக வேலை எரிச்சல்களும்,சனிக்கிழமை அலுவலகம் வர வேண்டும் என்று சொல்லப்பட்டிருப்பதும் கொஞ்சம் கொஞ்சமாக நியாபகம் வந்தது....
பி.கு: படம் பார்த்து வீட்டிற்கு வர 3-3:30 ஆகியதால் அடுத்த நாள் சனிக்கிழமை அலுவலகத்திற்கு நான் செல்லவில்லை!! :P

Related Posts Widget for Blogs by LinkWithin