உலகம் விரிஞ்சிருக்கு,நம் மனங்களிலே உரம் இருக்கு

ஒருத்தர் தனது சமூக நல ஸ்தாபனத்துக்கு பாட்டு ஒன்னு வேணும்னு Orkut-ல ஒரு சமூகத்துல(community) பொதுவா எல்லோரையும் கேட்டிருந்தாரு. சரி நாமலும் எழுதி பார்ப்போமேன்னு எழுதுனது!!
அவரு இதை எடுத்துப்பாரான்னு இல்லையானு தெரியல. இருந்தாலும் எழுதினதுக்காக அனுப்பி வெச்சேன்.
எப்படி இருக்கு ,இன்னும் எப்படி செம்மை படுத்தலாம்னு படிச்சிட்டு சொல்லுங்க!! :-)
------------------------------------------------------------------------------------

உலகம் விரிஞ்சிருக்கு அண்ணே அண்ணே
நம் மனங்களிலே உரம் இருக்கு அண்ணே அண்ணே

என்னதான் கஷ்டங்கள் இருக்கட்டும் நமக்குள்ளே
இருந்தாலும் பயம் வேண்டாம், விட்டுத்தள்ளு பரவாயில்ல
கடலலை போல் கஷ்டங்கள் திரண்டுருண்டு வந்தாலும்
தலைமேல எழுந்தோடி இடிபோல விழுந்தாலும்
மலை போல நிப்போமே, அசங்காது சிரிப்போமே
ஒரு கை பார்த்திடுவோம்,எதுவாக இருந்தாலும்

என்னத்தான் வாழ்க்கையிது,எது உண்மை,எது நன்மை
ஒன்னுமே புரியலதான்,என்ன பண்ண நீ சொல்லு
அதுக்காக ஓயாத, சுவரோரம் சாயாத
இருக்கரவரை வாழ்ந்திருபோம்,சிரிப்போடு சேர்ந்திருப்போம்
முடிஞ்ச வர முயற்சி செய்வோம்,வாழும்வரை உதவி செய்வோம்
மனசிருக்கு வானளவு, அன்பிருக்கு அரவனைப்போம்

விழுந்தாக்கா ஏத்தி விட நட்பிருக்கு கவலையில்ல
தோள் மேல சாய்ஞ்சிக்கலாம், களைப்பான நாட்களிலே
பாலைவன தேசம் போல் உன் வாழ்க்கை காய்ஞ்சிருக்கும்
கஷ்டங்கள் பல பார்த்து ஓடாக தேய்ஞ்சிருக்கும்
மழை போல நாங்க உன் நெஞ்சத்த குளிர வைப்போம்
கலங்காதே என் தோழா, உன் தாகம் தீர்த்திடுவோம்

உலகம் விரிஞ்சிருக்கு அண்ணே அண்ணே
நம் மனங்களிலே உரம் இருக்கு அண்ணே அண்ணே

0 comments:

Related Posts Widget for Blogs by LinkWithin