போன பகுதியில வேற்று கிரக ஊர்தி மட்டும் இல்லாம வேற்று கிரக மனிதர்களும் ராஸ்வெல் சம்பவத்தில் இருந்து மீட்டெடுக்கப்பட்டாங்க என்று சொல்லியிருந்தேன். இதை பத்தி பார்க்கனும்னா நாம ராஸ்வெல் சம்பவத்தின் உபகதைகள் பற்றியும் கொஞ்சம் தெரிஞ்சுக்கனும்.க்ளென் டென்னிஸ் (Glenn Dennis) என்பவ
ர் ராஸ்வெல்லில் சம்பவம் நடந்த சமயத்தில் பிரேத உடல் பதனப்படுத்தும் நிபுணராக ் (mortician) பணியாற்றி வந்தார். 1989-ஆம் ஆண்டு திடீரென்று, அவர் ராஸ்வெல் சம்பவம் நடந்த சமயத்தில் நடந்ததாக சில விஷயங்களை கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். அவரின் கூற்றுப்படி ஜூலை 1947-இல்,ராஸ்வெல் சம்பவம் நடந்துகொண்டிருந்த சமயம் அவருக்கு ராஸ்வெல்லின் விமானப்படை தளத்தில் இருந்து இரண்டு தொலைப்பேசி அழைப்புகள் வந்தனவாம். முதல் அழைப்பில், சராசரிக்கும் சிறியதான அளவில் பிரேதங்களை பதனப்படுத்த பெட்டிகள் வேண்டும் என்று கேட்கப்பட்டது என்றும்,இரண்டாவது அழைப்பில் பாலைவனப்பகுதியில் பல நாட்கள் கிடந்த பிரேதங்களை எப்படி பாதுகாப்பது என்பது பற்றி கேள்விகள் கேட்கப்பட்டது என்றும் கூறினார்.பிறகு வேறு ஏதோ வேலையாக வெளியே சென்ற போது ப்ரேசலின் பண்ணை வழியாக செல்லவேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டது என்றும்.
அப்பொழுது தனக்கு அறிமுகமான ஒரு நர்ஸை அங்கு பார்த்ததாகவும். அந்த நர்ஸ், விபத்துக்குள்ளான இடத்தில் வேற்றுகிரக மனிதர்களின் சடலங்கள் மீட்டெடுக்கப்பட்டன என்று சொன்னதாகவும்,அவற்றின் மேல் பிரேத பரிசோதனை
கூட செய்யப்பட்டது என்றும் கூறுகிறார். சம்பவம் நடந்த கொஞ்ச நாட்களிலேயே அந்த நர்ஸ் காணாமல் போய்விட்டதாகவும்,தான் எவ்வளவு தேடியும் அவரை கண்டு பிடிக்க முடியவில்லை என்றும் கூறுகிறார் அந்த நர்ஸ் வரைந்து கொடுத்ததாக சொல்லிக்கொண்டு சில வரைபடங்களை கூட காட்டினார்.
அவரின் பேச்சை கேட்டுக்கொண்டு சிலர் ஆராய்ச்சி செய்து பார்த்ததில்,அவர் சொன்ன பெயரில் எந்த ஒரு்ரு நர்ஸும் ராணுவத்தில் வேலை செய்ததாக சான்று இல்லை.அரசாங்கம் தான் இந்த விஷயம் வெளியே தெரியக்கூடாது என்பதற்காக எல்லா தடயங்களையும் அழித்து விட்டது என்கிறார் இவர். வயதாகிவிட்டது அல்லவா??அதனால் பாவம் புத்தி மழுங்கி போய் விட்டது என்கின்றனர்,இவற்றை நம்பாதவர்கள்!!
இப்படி இந்த ராஸ்வெல் சம்பவத்தை ஒத்தி பல உபகதைகள். பல்வேறு நேரில் கண்ட சாட்சியங்கள் மற்றும் கதைகளின் பிரகாரம், இந்த சம்பவத்தின் போது சில வேற்று கிரக வாசிகள் மீட்டெடுக்கப்பட்டனர் என்றும். அந்த உடல்களின் மீது பிரேதப்பரிசோதனையும் செய்யப்பட்டன என்று ஒரு கருத்து முன்னமே இருந்து வந்தது.
1995-ஆம் ஆண்டு ரே சாண்டில்லி (Ray Santilli) எனும் படத்தயாரிப்பாளர் , வேற்று கிரக மனிதர்களின் மேல் செய்யப்பட்ட பிரேத பரிசோதனையின் போது எடுக்கப்பட்ட படம் என்று ஒரு குறும்படத்தை வெளியிட்டார்!! இது வேற்று கிரக ஆர்வலர்கள் இடையே பெறும் பரபரப்பை ஏற்படுத்தியது.இதை அவர் வேற்று கிரக ஆரா
ய்ச்சியாளர்களிடையே போட்டு காண்பித்தார். இப்படியே இது ஒரு 30 நாடுகளில இந்த படம்் போட்டு காண்பிக்கப்பட்டது. இதை பார்த்த சில பேர் இதை சுத்த ஏமாற்றுவேலை என்று முதலில் இருந்தே சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். இதனையடுத்து 2006-ஆம் ஆண்டு,ரே சாண்ட்டில்லி இந்த படம் முழுவதுமாக உண்மை கிடையாது,இதில் சில காட்சிகள் மட்டுமே உண்மையில் நடந்த பிரேதப்பரிசோதனையின் போது நடந்தது என்றும் ,மீதி தான் முன்பு பார்த்ததை வைத்து ரீமேக் செய்யப்பட்டது என்றும் ஒத்துக்கொண்டார். படம் பார்ப்பதற்கு சற்றே களேபரமாக இருக்கும் என்பதாலும் , இது உண்மையான படம் அல்ல என்று பரவலாக கருதப்படுவதாலும் அதை நான் இந்த பதிவில் வெளியிடவில்லை. "Alien autopsy" என்று யூட்யூபில் தேடினால் உடனே உங்களுக்கு கிடைக்கும்.
ராஸ்வெல் சம்பவம் நடைபெற்றதில் இருந்துதான் மனிதனுக்கு வேற்று கிரக உயிர்களுக்கும் முதன் முதலில் தொடர்பு ஏற்பட்டது என்றும் அதற்கு பின் பல சமயங்களில் வேற்று கிரகத்தினர் வந்து சென்று கொண்டு இருக்கின்றனர் என்றும் பரவலாக வேற்று கிரக ஆர்வலர்கள் நம்பி வருகிறார்கள். இப்படி வேற்று கிரக உயிர்களை வைத்திருக்கவும் ,அவர்களிடம் ஆராய்ச்சி செய்யவும் நெவாடா(Nevada) எனும் மாநிலத்தில் உள்ள ஏரியா 51 (Area 51) எனும் ராணுவ தளம் பயன்படுத்தப்படுகிறது என்று நம்பப்படுகிறது. இந்த ஏரியா 51-இல் வைக்கப்பட்ட வேற்று கிரக உயிர்களிடத்தில் எடுக்கப்பட்ட பேட்டி என்று சொல்லிக்கொண்டு ஒரு நிகழ்படம் இணையத்தில் உலவிக்கொண்டு இருக்கிறது தெரியுமா??
இந்த நிகழ்படம் பற்றியும் பொதுவாக ஏரியா 51 பற்றியும் ,அங்கு நடப்பதாக கூறப்படும் ஆராய்ச்சிகள் பற்றியும் இந்த நிகழ்படத்தில் விலாவாரியாக கூறியிருக்கிறார்கள். பொறுமையும் ஆர்வமும் இருந்தால் பாருங்கள்.
இது உண்மையா பொய்யா என்று நான் சான்றளிக்கப்போவதில்லை!! உங்கள் சுய புத்தியை கொண்டு முடிவு செய்து கொள்ளுங்கள்!! :-)
16 comments:
சுவாரசியமான தகவல்கள்தான்.
மனிதன் ஒன்றும் நிலவுக்கு எல்லாம் போகவில்லை, அமெரிக்க அரசாங்கம் பூமியிலேயே ஒரு செட் போட்டு படம் காட்டி ஏமாற்றிவிட்டது என்று சில பேர் சொல்கிறார்கள் தெரியுமா???
andha mail enaku kooda wandhuchu konja warushanghaluku munnadi...
யூ டியுபில் உள்ள ஏலியன் பிரேதப்படம் பார்த்தேன்,நீங்கள் சொன்ன மாதிரி எப்படி நம்புவது என்று தெரியவில்லை.
"சோ" கூட இந்த நிலவு ட்ரிப் புருடாவாக இருக்கக்கூடும் என்று சொல்லியதாக ஞாபகம்.
அடுத்து வரப்போகிற பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
//மனிதன் ஒன்றும் நிலவுக்கு எல்லாம் போகவில்லை, அமெரிக்க அரசாங்கம் பூமியிலேயே ஒரு செட் போட்டு படம் காட்டி ஏமாற்றிவிட்டது என்று சில பேர் சொல்கிறார்கள் தெரியுமா???//
I think there is a documentary film (Conspiracy theory: Did we go to moon?) with substantial claim regarding this issue. Waving flag, lighting and shadows, floating dust etc.. are those discrepancies raised by Russian scientist. If you think laws of physics are universally applicable, then after watching this film you would say "Niel Armstorm is a cartoon character in the film taken in A-51"
Babu
Ctd.. So, after watching that documentary you might have conluded that "Moon landing was just hoax". But if you finish reading http://www.clavius.org/index.html
this, you would say "aha, excellently refuted all allegations and now I believe in the name of God that we landed on Moon"
I hope CVR will give clear view reg. this rather diplomatic.
Babu
நிறைய ஹோம் ஒர்க் செய்து அருமையாக பதிவிட்டிருக்கிறீர்கள்...
நாங்கல்லாம் சும்மா மொக்கை போட்டு ஒரு பதிவை வலை ஏற்றும்போது, இவ்வளவு தகவல்களை படிச்சு, நம் மக்கள் தெரிஞ்சுக்கட்டும் என்று நேரத்தை ஒதுக்கி எழுதுவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது...!!!
தொடருங்க காத்திருக்கேன்...
@துளசி டீச்சர்
வாங்க டீச்சர்!!
அதிலென்ன சந்தேகம்?? நாம பேசறது விண்வெளி ஆச்சே!! கண்டிப்பா சுவாரஸ்யமாத்தான் இருக்கும் :-)
@அனானி
//andha mail enaku kooda wandhuchu konja warushanghaluku munnadi... //
நானும் பாத்திருக்கேன்,இது சம்பந்தமா ஒரு நிகழ்படம் கோட பாத்திருக்கேன்!!
அதை பத்தி கொஞ்சம் ஆராய்ச்சி பண்ணி மேலதிக தகவல்களோட எழுதலாம்னு திட்டம்!! :-)
@வடுவூர் குமார்
//யூ டியுபில் உள்ள ஏலியன் பிரேதப்படம் பார்த்தேன்,நீங்கள் சொன்ன மாதிரி எப்படி நம்புவது என்று தெரியவில்லை.//
எனக்கு தெரிந்த பல பேருக்கு இந்த நிலைமை தான் குமார்!! :-)
@பாபு
வாங்க பாபு!! இணைப்புக்கும் மிக்க நன்றி. இதை பற்றி எழுத இந்த இணைப்பு உபயோகமாக இருக்கும்!! பதிவு போட்ட பிறகு படித்து விட்டு உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்!! :-)
@செந்தழல் ரவி
உங்கள் பின்னூட்டம் கண்டு மகிழ்ச்சி!!
உங்களின் கொரியா பற்றிய பதிவை சமீபத்தில் படித்தேன். அதில் நீங்களும் நிறைய தகவல்களை அளித்திருந்தீர்கள்!!
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி!! :-)
மீண்டும் ஒரு ஆறிவுப்பூர்வமான ஆராய்ச்சிபூர்வமான பதிவு!
Informational!
hehe! Moon landing conspiracy pathi seekiram sollunga!
ஏதாவது Wormholes போன்ற workarounds வருங்காலத்தில் கண்டு பிடிக்கப்படலாம்.
அப்ப, வரும் பதிவுகளில் இதையும் எதிர்பார்க்கலாம் என்று சொல்லுங்கள்.
ம்ம்ம்ம்....நம்புவது நம்பாமை பேதமை நம்புவது அஞ்சலறிவார் தொழில்னு நம்ம தெருவள்ளுவர் சொல்லீருக்காரு. ஆகையால நானும் அப்படியே இருந்துக்கிறேன். :)
@Dreamzz
வாழ்த்துக்களுக்கு நன்றி ட்ரீம்ஸ்
@வடுவூர் குமார்
பார்க்கலாம் குமார்,அதுவும் ஒரு சுவாரஸ்யமான தலைப்பு தான். ஆனால் அதை பற்றி நிறைய ஆராய்ச்சி செய்ய வேண்டும். பதிவு எழுதும் அளவுக்கு தகவல்கள் முழுமையாக அதில் இப்போதைக்கு தெரியாது!! :)
@ஜிரா
வாங்க அண்ணா!!
என்னை ஏன் இப்படி திட்டுறீங்க தல?? :(
அந்த குரலுக்கு அர்த்தத்தையும் கொஞ்சம் தாங்களேன் அண்ணா!! :)
சில தினங்களுக்கு முன்பு, வின்வெளி தொடர்புடைய பத்திரிக்கை செய்தி ஒன்றை படித்தேன். அதை பத்திரமாக கத்தரித்து வைத்திருக்கிறேன். உங்களுக்கு scane செய்து அனுப்பி விடட்டுமா? என் பதிவில் ஒரு வரி பதில் கொடுங்கள் நண்பரே.
மிக அருமையான பதிவுகள். அனைத்து பாகங்களையும் தொடர்ச்சியாக படித்து முடித்துவிட்டேன் . எழுத்துக்களும் மிக சுவாரஸ்யமாக இருந்தது. தொடருங்கள்.
ஒரே மூச்சில் ஒன்பது பாகங்களையும் படித்து முடித்தேன், நம்புகிறோமோ இல்லையோ படிப்பதற்கும் பேசுவதற்கும் மிக சுவாரசியமாக இருக்கிறது.
மிகவும் நல்ல பதிவு...இதற்கான முழு விபரங்களையும் எடுத்து பதிந்துள்ளீர்கள்..பாராட்டுக்கள்..
அண்மையில் நான் அணுகிய "வளாகம்" எனும் வலைப்பூவில் வேற்று கிரக மனிதர்கள் உண்மையில் வேற்று கிரகத்தை சேர்ந்தவர்களில்லை..நாம் தான்..! அதாவது எதிர்காலத்திலிருந்து வந்த மனிதர்களே என்று பிரசுரமாயிருந்ததை கண்டு ஆச்சரியப்பட்டேன்..! இருக்கலாம்...ஏனெனில் எழுத்தாளர் "சுஜாதா"வின் கட்டுரை ஒன்றில் (ஏன் எதற்கு எப்படி) மனிதன் வேகத்தில் பயணிக்கும் போது வேகம் கூடக்கூட அவன் பயணிக்கும் திசையில் கொஞ்சம் சுருங்குகின்றான்..! என்று விஞ்ஞானி ஐன்ஸ்டீன் கூறியதாக கூறியுள்ளார்..! நம்புவதற்கு கொஞ்சம் கஷ்டமாயிருந்தாலும் உண்மை..! அத்துடன் வேகத்தில் பயணிக்கும் மனிதனின் கைக்கடிகாரம் ஓய்விலுள்ள மனிதனின் கைக்கடிகாரத்தை விட கொஞ்சம் மெதுவாக ஓடுகிறது..! என்றும் ஐன்ஸ்டீன் கூறியுள்ளாராம்..! இதனடிப்படையில் பார்த்தால் "அவர்கள்..!" குள்ளமானவர்கள் என்ற கருதுகோளும் வெற்றுக்கண்ணுக்கு தென்படமாட்டார்கள் என்ற கருதுகோளும் (காரணம்...ஒளிப்போட்டோன்களை நம்மால் பார்க்க முடியவில்லை அல்லவா..?) ஏற்கத்தக்கதாகின்றன அல்லவா..? அவர்கள் எம்மைப் போல் நான்கு பரிமாண ஆட்களில்லை..அவர்கள் எத்தனை பரிமாண ஆட்களோ...? சிந்திக்கவும்..!
@கஜேன்
நீங்கள் சொல்வது சரிதான்!! வேற்றுகிரக மனிதர்கள் என்று நாம் என்னுவோர் கடந்தகாலத்திற்கு பயணித்து வந்திருக்கும் எதிர்கால மனிதர்கள் தான் என்று ஒரு கருத்தும் உண்டு.
தங்களின் பகிர்வுக்கு மிக்க நன்றி :)
Post a Comment