தொடக்கம் பாரதியுடன்

நான் தமிழில் ஒன்று ஆரம்பிக்கும் பொழுது அதில் பாரதி இல்லாமல் இருக்க முடியுமா??என் "Orkut" தோற்றத்தில் (profile) கூட இந்த கவிதையை பார்க்கலாம்!!மனுஷன் என்னமா எழுதியிருக்கான்!!!!


நீங்களும் படித்து மகிழுங்கள்

----------------------------------------


தேடிச் சோறு நிதந்தின்று -பல

சின்னஞ் சிறுகதைகள் பேசி -மனம்

வாடி துன்பமிக உழன்று - பிறர்

வாடப் பல செயல்கள் செய்து - நரை

கூடி கிழப்பருவம் எய்தி - கொடுங்

கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல

வேடிக்கை மனிதரை போலே - நான்

வீழ்வேனென்று நினைத்தாயோ?!

- மகாகவி சுப்ரமணிய பாரதி

இனிதே தொடங்கியது

எனக்கு தமிழ் ரொம்ப பிடிக்கும் என்று உங்க எல்லோருக்கும் தெரியும்.

ஆனால் நான் மூன்றாவது வகுப்பு வரைக்கும்தான் தமிழ் படித்தேன் என்பதால் நான் எழுதும் தமிழில் எழுத்து பிழை ரொம்ப அதிகமா இருக்கும்!! :(

நான் எழுதிய சில கவிதைகளை படித்து விட்டு நிறைய நண்பர்கள் எழுத்து பிழைகளை குறைத்தால் ரொம்ப நல்லா இருக்கும் என்று சொன்னார்கள். அதன் விளைவு தான் இந்த வலை பதிவு.அது கூட இன்னொரு விஷயம் என்ன என்றால், நான் பொதுவாவே எழுத ஆரம்பிச்சா வள வளனு எழுதுவேன். இந்த வலை பதிவு வழியா சுருக்கமா எழுதவும் கற்று கொள்ளலாம் என்று திட்டம்.

எல்லாம் வல்ல இறைவன் துணை இருக்கட்டும். :)

Related Posts Widget for Blogs by LinkWithin